தமிழ் ஷீஆ
Visit us on:
  • முகப்பு
  • ஆவணங்கள்
    • வீடியோ
    • ஆடியோ
    • புகைப்படங்கள்
    • நூல்கள்
  • செய்திகள்
  • கருத்துக்கள்
  • ஆக்கங்கள்
  • கேள்வி - பதில்

ஷீஆக்களின் கொள்கைகளும் முஸ்லிம்களுக்கெதிரான அவர்களின் செயற்பாடுகளும்

14/4/2015

Comments

 
அலீ (ரழி) அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும் முஸ்லிம்களில் அநேகர் அநியாயம் செய்து விட்டதாகவும், ஸஹாபாக்கள் அநீதியிழைத்து விட்டதாகவும், நபியவர்களுக்குப்பின்னால் அலீ அவர்களுக்கே ஆட்சியைக் கொடுத்திருக்க வேண்டும் ஆனால் அவர்கள் கொடுக்கவில்லையென்றும், அபூபக்கர், உமர், உஸ்மான் போன்றோர் அதைத் தட்டிப் பறித்துக்கொண்டதாகவும், அஹ்லுஸ்ஸுன்னாவினர் அஹ்லுல் பைத்தினருக்கு எதிரானவர்கள் நாமே அஹ்லுல் பைத்தினருக்கு சார்பானவர்கள் என்றும் ஷீஆக்கள் அன்று முதல் இன்று வரை கூறி வருகின்றனர்.

1.யூதனாக இருந்து முஸ்லிமாக நடித்த அப்துல்லாஹ் இப்னு ஸபஃ


இந்த சிந்தனை உருவாகி முஸ்லிம்களுக்குள் பிளவு விளையக் காரணமானவன் யமன் பிரதேசத்திலிருந்து வந்த அப்துல்லாஹிப்னு ஸபஃ எனும் ஒரு யூதன். இவன் இஸ்லாத்தைத் தழுவி தன்னை ஒரு முஸ்லிமாக அறிமுகப்படுத்திக் கொள்கின்றான். தன்னிடமிருந்த யூதக் கொள்கைகள் அனைத்தையும் மக்களிடையே இஸ்லாமியப்; போர்வையில் நுழைக்கிறான். ஓவ்வொரு நபிக்கும் ஒவ்வொரு வஸீ வேண்டும் ஒவ்வொரு நபியும் தனக்குப்பின்னால் ஒருவரை நியமித்து விட்டுச் சென்றுள்ளார். மூஸாவுக்கு வஸீ யூஷஃ . எனவே முஹம்மதுக்கும் அவ்வாறு ஒருவர் இருக்க வேண்டுமே மகனில்லாது விட்டாலும் மருமகனையாவது நியமித்திருக்க வேண்டுமே என்று சொல்லி பலவீனர்களையெல்லாம் தன் கொள்கையின் பால் ஈர்த்துக்கொள்கின்றான். 



உஸ்மான் (ரழி) அவர்களின் காலத்திலேயே இவன் இந்தப் பிரசாரத்தை மேற்கொண்டான் அதில் அவன் வெற்றியும் கண்டான். உஸ்மான் (ரழி) அவர்கள் இயல்பிலேயே மென்மை சுபாவமுடையவர் என்பதாலும் இஸ்லாமிய ஆட்சி பரந்துவிரிந்திருந்ததாலும் இந்த நிலைமைகளைப் பயன்படுத்தி இவன்தனது விஷக்கருத்துக்களை மக்களிடையே பரப்புகின்றான். ஆயிஷா (ரழி), அலீ (ரழி), ஸுபைர் (ரழி), தல்ஹா (ரழி) போன்றோர் உஸ்மான் (ரழி) அவர்களின் ஆட்சிக்கெதிரகவுள்ளதாக அவர்கள் எழுதுவதைப் போன்றே கடிதங்ககளை எழுதி தூரப்பிரதேசங்களுக்கெல்லாம் அனுப்புகின்றான். விவரமறியாத தூரதேச மக்கள் இவற்றை நம்புகின்றார்கள். நபித்தோழர்களெல்லாம் உஸ்மான் (ரழி) அவர்கள் மீது வெறுப்போடுதான் உள்ளார்கள் என்றும் தவறாக விளங்குகின்றார்கள். 


எனவே ஆட்சி அலிக்குத்தான் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை மக்களிடையே இதன் மூலம் இந்த யூதன் வளர்க்கின்றான். உஸ்மான் (ரழி) அவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை ஒரு முறை ஆயிஷா (ரழி) அவர்கள் எதிர்க்கின்றார்கள். அப்போது மஸ்ரூக் அவர்கள் ‘நீங்கள் என்ன இதை எதிர்க்கின்றீர்கள்? நீங்கள்தானே இது விடயமாகக்; கடிதமெழுதினீர்கள்’ என்று கேட்கின்றார். அதற்கு ஆயிஷா (ரழி) அவர்கள் ‘எவனை முஃமின்கள் நம்பிக்கை கொண்டு காபிர்கள் நிராகித்தார்களோ அவன் மீது ஆணையாக நான் இவ்விடம் வரும்வரை அப்படியொன்றை எழுதவில்லை’ என்று சொல்கிறார்கள். எந்தளவுக்கு இவ்வாறான கள்ளக் கடிதங்கள் புழங்கியதென்றால் உஸ்மான் (ரழி) அவர்கள் எழுதியது போன்று அவருக்குத் தெரியாமலேயே கடிதங்கள் எழுதப்பட்டன. இவ்வாறான சூழ்ச்சிகள் மூலம் உஸ்மான் (ரழி) அவர்களுக் கெதிராக மக்களைத்திரளவைத்து, அதே மக்களையே அவர்களை கொலை செய்ய வைத்து, பின்னர் அலீ (ரழி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் அவருக்குப் பக்கபலமாக இருப்பதாகக் காட்டிக்கொண்டு அவரைக் கடவுள் நிலைக்கு உயர்த்தி…… ஓர் அசிங்கமான அத்தியாயத்தை இந்த யூதனும், அவனது கூலிப்படையினரும் வரலாற்றில் பதிய வைத்தனர். இவர்களின் இந்த அத்துமீறல்களைச் சகிக்க முடியாமல் அலீ (ரழி) அவர்கள் இவர்களை கொன்றொழிக்கவும் செய்தார்கள். இத்தகைய கயவர்களே இந்த வழிகெட்ட ஷீஆப்பிரிவினராகும். அன்று முதல் இன்று வரை இந்த அநியாயங்களை அவர்கள் செய்து கொண்டேயிருக்கின்றனர். முஸ்லிம்களைக் கேவலப்படுத்த வேண்டும், அழிக்க வேண்டும் என்பதே யூதர்களின் இலக்காகும். அதற்காகத்தான் ஆஷூரா பத்தாம் நாள் விழா போன்ற வழிகேடுளையெல்லாம் அறிமுகம் செய்தனர்.

2.ஷீயாக்களின் இமாமியாக் கோட்பாடு


இந்த ஷீஆக்களிடத்தில் காணப்படும் இன்னொரு கொள்கைதான் இமாமியாக் கோட்பாடு எனப்படுகின்ற பனிரெண்டு இமாம்கள் பற்றிய கொள்கையாகும். பதினொறு இமாம்கள் மரணித்து விட்டதாகவும் இன்னும் ஒரேயொருவர் வரவிருப்பதாகவும் அவர்தான் அல் காயிம் பில்லா எனப்படுகின்ற மஹ்தியென்றும் அவரை அல்லாஹ் ஹீப்ரு மொழியில்தான் அழைப்பான். அவர்தான் தாவூதின் குடும்பத்தாரின் சட்டங்களையே நடைமுறைப்படுத்துவார். புதிய வேதத்தையும், புதிய சட்டத்தையும் இவ்வுலகில் நடைமுறைப்படுத்துவார். மக்காவையும் மதீனாவையும் உடைப்பார். 90 வீதமான அரபிகளைக் கொலை செய்வார். அவரைப் பார்த்து மக்கள் ‘இவர் முஹம்மதின் குலத்தவரல்ல. அப்படியிருந்தால் இவர் இந்த அரபிகளுக்கு இரக்கம் காட்டியிருப்பார்’ எனக் கூறுவர்….’ என்றல்லாம் இவர்கள் எழுதி வைத்துள்ளனர்.


அண்மையில் ஈராக்கின் நஜ்ப் பகுதியில் ‘அதிகமாகக் கொள்ளையடியுங்கள், விபச்சாரம் செய்யுங்கள் ஏனென்றால் பித்னாக்கள் அதிகரிக்கும் போதுதான் மஹ்தி வருவார்’ என்று அறிக்கை விட்டார்கள். ஸிர்தாப் ஸாமுர்ரா எனும் இடத்தில் மஹ்தி வரவிருப்பதாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய படுமோசமானவர்களே நம்பிக்கைகளை ஷீயாக்களின்  நூல்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றன.


3.முஸ்லிம்களின் படுகொலைக்குக் காரணமான ஷீயாக்கள்


இவர்களால் விளைந்த மற்றொரு இரத்தக்கரை படிந்த வரலாறொன்றுள்ளது. ஹி 600 களில் அப்பாஸிய ஆட்சி நிலவிய போது முஸ்தன்ஸிர் என்பவருக்குப்பின்னால் முஸ்தஃஸிம் என்பவர் ஆட்சிக்கு வந்து ஆளும் போது அவருக்கு இப்னுல் அல்கமீ, அபூ நுஸைர் அத்தூஸி என்ற இரு அமைச்சர்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் ஷீஆக்களாவர். தாத்தாரியர்களுடன் கடுமையான யுத்தம் மூண்டிருந்த அக்காலப் பகுததியில் இப்னுல் அல்கமீ தாத்தாரிய மன்னன் ஹோலாகூவுக்கு ‘நீ பக்தாதுக்கு வா நானுனக்குதவுகின்றேன்’ என்று கடிதம் அனுப்புகின்றார். அதற்கு தாத்தாரிய மன்னன் ஹோலாகூ ‘எவ்வாறு நான் உன்னை நம்புவது, உன்னை நான் நம்ப வேண்டுமானால் ஒரு லட்சம் பேர்கொண்ட படையை குறைத்து விடு?’ என்று பதில் எழுதுகின்றான். இதைக்கேட்டு படையைக் குறைப்பதற்கு இப்னுல் அல்கமீ கலீபாவுக்கு ஆலோசனை கூறுகின்றான். 



அதற்கேற்ப கொஞ்சம் கொஞ்சம் படை குறைக்கப்படுகின்றது. இறுதியாகப் பத்தாயிரம் படை மட்டுமே எஞ்சியிருக்கும் போது இப்னுல் அல்கமீ ஹோலாகூவுக்கு தகவல் அனுப்புகின்றான் அதற்கேற்ப தாத்தாரியப் படை வந்தது அப்போது கலீபாவிடம் இந்த இப்னுல் அல்கமீ ‘தாத்தாரியப் படை வந்து விட்டது நாம் ஒரேயடியாக அவர்களோடு யுத்தம் செய்யாமல் சமாதனம் செய்து பார்ப்போம்’ என்று கூறி தாத்தாரியப் படையிடம் சென்று பேரம் பேசவிட்டுத்திரும்பி வருகின்றான். கலீபாவிடம் வந்து ‘தாத்தாரிய மன்னர் ஹோலாகூ தனது மகளை உங்கள் மகன் அபூபக்கருக்கு மனம் முடித்துத் தர விரும்புகின்றார் என்று கூறுகின்றான் கலீபாவும் இதை நம்பி 600 நீதிபதிகள், அறிஞர்கள் மற்றும் தனது குடும்பத்தாருடன் அவ்விடத்துக்குப் போனதும் மன்னரின் குடும்பம் உற்பட அனைவரும் இந்த சதியின் மூலம் படுகொலை செய்யப்படுகின்றனர். மன்னரை மட்டும் விட்டுவிடலாம் என்று ஹோலாகூ நினைத்த போது அவரைக்கொல்லத்தான் வேண்டும் என்று இப்னுல் அல்கமீ பிடியாய் நிற்கின்றான். அதன்படி மன்னர் கொல்லப்பட்டார். அதன்பின் பக்தாதிலிருந்த அஹ்லுஸ்ஸுன்னாவினர் தேடித் தேடிக் கொல்லப்பட்டனர். இப்படிப்பட்ட இரத்த வராலாற்றுக்குக்காரணமானவர்களே இந்த ஷீஆக்கள்தான் என்பதை நாம் விளங்க வேண்டும்.இப்னுல் அல்கமீ, அபூ நுஸைர் அத்தூஸி போன்றோரை நாம் இழந்து விட்டோம் என்று கொமைனீ தனது ஹுகூமத்துல் இஸ்லாமியா என்ற நூலில் 127ம் பக்கத்தில் பாராட்டி எழுதியுள்ளான்

4.இன்றைய ஈரானில் அஹ்லுஸ் ஸுன்னாவிற்கு எதிரான ஷீயாக்களின் அடக்குமுறைகள்


இதே கொலைவெறியாட்டம் இன்றும் ஈரானில் நடைபெற்றுக்கொண்டுதானிருக்கின்றன. அவ்வாறு கொல்லப் பட்டவர்களின் விவரங்களைத் தருகின்றோம்.
  1. 1986ல் கப்ருகளை இழிவுபடுத்தினார் என்ற பேரில் பஹ்மன் ஸுகூர் எனும் அறிஞர் கொல்லப்பட்டார்.
  2. 1990ல் அப்துல் வஹாப் அல் ஹவாபி என்பவர் கொல்லப்பட்டார். இதேயாண்டில் குராஸானைச் சேர்ந்த குத்ரதுல்லா ஜஃபரீ என்பவர் கொல்லப்பட்டார்.
  3. குர்திஸ்தானில் தனியாக ஓர் இஸ்லாமிய அமைப்பை வழிநடாத்திவந்த அஷ்ஷேக்; நாஸிர் அஸ்ஸுப்ஹானி என்பவர் கொல்லப்பட்டார்.
  4. வைத்தியத்தில் தேர்ந்திருந்த அலீ முழபப்பரியான் என்பவர் 1992ல் கொல்லப்பட்டார்.
  5. ஈரானில் அஹ்லுஸ்ஸுன்னாவினருக்கென மத்ரஸாவொன்றை நடாத்தி வந்த முஹம்மத் ஸாலிஹ் அழ்ழியாஈ என்பவரிடம் வஹாபிஸத்தைப் பரப்புவதாக குறித்த மத்ரஸாவை மூடுமாறு வேண்டப்படுகிறது அவர் ‘நீங்கள் வேண்டுமானால் அதை மூடுங்கள் நானோ மூடமாட்டேன்’ என்று மறுக்கின்றார். பின்னர் உடன்பட்டு மத்ரஸாவை மூடுகின்றார். அவரை கண்டம் துண்டமாக வெட்டிச் சாய்த்து விட்டு வீதிவிபத்தொன்றில் இறந்து போனதாய் அறிவித்தார்கள்.
  6. பைர்ஜன்த் எனும் இடத்தில் பள்ளியில் இமாமாகவிருந்த மௌலவீ அப்துல் அஸீஸ் அல்லுவியானீ 1994ல் கொல்லப்பட்டார்.
  7. மௌலவீ அப்துல் மிக் முல்லா தாதா என்பவர் கொல்லப்பட்டார்.
  8. அப்துந்நாஸிர் ஜெம்ஸீத் என்பவர் கொல்லப்பட்டார்.
  9. ஷேக்; முல்லா என்பவர் கொல்லப்பட்டார்.
  10. உஸ்தாத் பாரூக் புருஸாத் என்பவர் கொல்லப்பட்டார்.
  11. கலாநிதி அப்துல் அஸீஸ் அல் காலிமி என்பவர் கொல்லப்பட்டார்.
  12. மௌலவீ யார் முஹம்மத் அல் கஹ்ஸாஈ, மௌலவீ அப்துஸ்ஸத்தார், ஷேக்; நூருத்தீன் அல் குறைபீ, அப்துல் ஜப்பார் நூர் முஹம்மத், ஸலாஹ் ஸகீ பின் ஹுஸைன், அன்வர் அல் முபாரகீ, மூஸா அல் கர்மீ, ஷம்ஸுத்தீன் அல் கியானீ போன்றோர் கொடூராமாகக் கொல்லப்பட்டோருள் சிலராகும். இவைகளில் பல அஹ்மத் நஜாதீ ஆட்சிக்காலத்தில் நடந்தவை.
இத்தகைய வெறியாட்டமாடும் ஈரானைப்பார்த்து அஹ்மத் நஜாதீ இஸ்லாமியப் புரட்சி செய்வதாகக் கூறுகிறார்கள். இந்த ஷீஆக்களுக்கு மக்கா புனிதத்தளமல்ல. கர்பலாவே புனிதத்தளமாகும். இதனால்தான் ஹஜ் காலங்களைப் பார்த்து பெரும் கலவரங்களைத் தூண்டிவிடுகிறார்கள். புலூஸிஸ்தானிலுள்ள மிகப்பிரபலமான மஸ்ஜிதுல் பைழுல் கபீர், மக்கீ ஆகிய 200 வருடப்பழைமை வாய்ந்த இரு பள்ளிகளில் ஒன்றை மூடச்சொல்லி அரச உத்தரவு மூன்று முறை வரவே அதற்கு அங்குள்ள அறிஞர்கள் மறுத்த போது புல்டோஸர்கள் மூலம் பள்ளி தகர்க்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது. இந்த சம்பவம் முழு ஈரானையும் கவலையில் ஆழ்த்தியது. இத்தகைய படுபாதகங்களையெல்லாம் புரியும் இந்த நாட்டைப் பார்த்து ‘முஸ்லிம்நாடு இஸ்லாமிய ஆட்சியென்று சொல்லலாமா?????


5.முத்ஆ எனும் உத்தியோகபூர்வ விபச்சாரம்


ஷீஆக்களிடம் காணப்படும் மற்றொரு கொள்கையே முத்ஆத் திருமணமுறையகும். இது ஒரு சட்டபூர்வ விபச்சாரமாகும். ஒரு பெண்ணை குறிப்பிட்ட காலத்துக்கு வைத்துக் கொள்வதே இதுவாகும். இதனால் உருவாகும் வாரிசுக்கு சொத்துப் பங்கோ, எதுவும் கிடையாது. இந்த விபச்சார முறை ஈரானில் மலிந்து காணப்படுகின்றது. இதை அவர்களின் நூல்களிலேயே எழுதியுள்ளார்கள்.


ஸதூக் என்பவர் ‘மன்லா யஹ்ழுருஹுல் பகீஹ்| என்ற நுலில் 3ம் பாகம் 366ம் பக்கத்தில் ‘யார் ஒரு முஃமினான பெண்ணுடன் முத்ஆ முறையில் உறவு வைக்கின்றாரோ அவர் கஃபாவை எழுபது முறை தவாப் செய்தவரைப் போன்றவராவார்’(இது கஃபாவை கண்ணியப்படு;த்துகிறதா!) எனக் கூறுகின்றார்.
‘முத்ஆ என்பது எனது முன்னோரினதும், எனதும் மார்க்கமாகும். யார் அதைச் செய்தாரோ அவர் நம் மார்க்கத்தையே செய்தார். யாhர் அதை மறுத்தாரோ அவர் நமது மார்க்கத்தையே மறுத்தார்’ என்று ஜ.பர் அஸ்ஸாதிக் சொன்னதாக எழுதி வைத்துள்ளார்கள்.


‘அபூ அப்துல்லா (அலை) என்பவர் அவர்களிடம் ஜஃபர் அஸ்ஸாதிகிடம் வந்து ‘முத்ஆவுக்கு அல்லாஹ்விடம் கூலியுண்டா என்று கேட்டார் அதற்கவர் ‘அதன் மூலம் (முத்ஆவின் மூலம்) அல்லாஹ்வின் முகத்தை அவர் நாடியிருந்தால் அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அல்லாஹ் ஒரு நன்மையை எழுதுவான். அப்பெண்ணுக்கு அருகில் அவர் சென்றால் ஒரு பாவத்தை அல்லாஹ் மன்னிப்பான். அப்பெண்ணோடு சேர்ந்து விட்டு அவர் குளித்தால் அவரின் முடியிலிருந்து வடியும் ஒவ்வொரு துளிக்கும் அல்லாஹ் அவரின் பாவத்தை மன்னிப்பான்..’ இவையனைத்தும் ஸதூக் என்பவரின் ‘மன்லா யஹ்ழுருஹுல் பகீஹ்| என்ற நுலில் 3ம் பாகம் 366ம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளன.


‘முத்ஆ செய்பவர் அல்லாஹ்வின் கோபத்திலிருந்து தப்புவார். யார் இரு தடவை முத்ஆ செய்தாரோ அவர் நல்லவர்களோடு எழுப்பப்படுவார். யார் மூன்று முறை முத்ஆ செய்தாரோ அவர் என்னோடு நெருக்கமாயிருப்பார்’ (‘மன்லா யஹ்ழுருஹுல் பகீஹ்| 3ம் பாகம் 366ம் பக்கம்) என்றெல்லாம் எழுதி வைத்துள்ளார்கள்.


‘உங்களுக்கு முன் சென்றவர்கள் அனுபவித்த கஷ்டங்களையெல்லாம் அனுபவிக்காமல் இலகுவாக சுவனம் நுழையாலாமென்று நீங்கள் நினைக்கின்றீர்களா’ என்று அல்லாஹ் கேட்கின்றான் ஆனால் இவர்களோ முத்ஆ செய்துவிட்டால் இலகுவாகச் சுவனம் சென்றிடலாம் என்கின்றார்கள்.
ஷாஹுடைய ஆட்சியை ஒழிக்க வந்த தற்போதைய ஆட்சி பிரகடனப்படுத்திய இந்த முத்ஆ முறையால் தந்தையைத் தெரியாத ஐந்து இலட்சம் சிறார்கள் ஈரானிலிருப்பதாக அண்மையில் வெளியான அறிக்கையொன்று கூறுகிறது. லெபனானிலிருந்து வெளியாகும் ஷீஆக்களின் சஞ்சிகையான ஷிராஃ என்ற சஞ்சிகையின் 684வது இதழில் இவ்வறிக்கை வெளியாகியது.


எந்தளவுக்கு முத்ஆவை இவர்கள் ஆதரிக்கின்றார்கள் என்றால் கொமைனீ தனது கஷ்புல் அஸ்ரார் 2-292 என்ற நூலில் ‘முத்ஆ செய்வது குழந்தையுடனாக இருந்தால் அதனோடு உறவு வைத்துக் கொள்ளாமல் உறவுக்கு முந்திய ஆரம்பச் செயற்பாடுகளைச் செய்து கொள்ளலாம்’ என்று கூறியுள்ளார்.


6-ஷீயாக்களின் அவதூறுகள்


‘உமர் (ரழி) அவர்களுக்கு பிற்பகுதியில் ஒரு நோய் இருந்ததாம் ஆண்களின் நீரால்தான் அது குணமாகுமாம்’ என்றெல்லாம் அவதூறுகளை நபித்தோழர்களின் பேரால் கட்டவிழ்த்து விட்ட யூத அடிவருடிகளே இந்த ஷீஆக்களாகும்.


‘நபியவர்கள் ஸெயினப்(ரழி) அவர்களின் வீட்டுக்குப் போனார்களாம் அவர் குளிப்பதைப் பார்த்து உன்னைப் படைத்தவன் தூய்மையானவனாகி விட்டான் என்று சொன்னார்களாம்.


நபியவர்களும் ஆயிஷா (ரழி) அவர்களும் இருந்து கொண்டிருந்த போது அலீ (ரழி) அவர்கள் வந்தார்களாம். ‘பின்னால் போய் அமரு’ என அலீயைப் பார்த்து நபியவர்கள் சொன்னார்களாம். அலீ அவர்கள் பின்னால் போய் அமர்ந்தார்களாம். அது ஆயிஷாவின் மடியாக இருந்ததாம். உடனே ஆயிஷா அலீயைப் பார்த்து ‘எனது மடிதானா உனக்குக் கிடைத்தது?’ என்றார்களாம் அதற்கு நபியவர்கள் ஆயிஷாவைப் பார்த்து ‘சும்மா இரு’ என்றார்களாம் என்று நபியவர்கள் மீதே பொய்யுரைத்த பொய்யர்களே இவர்கள்.


நன்றி - boosarysallih.blogspot.com

Comments

    பதிவுகள்

    July 2017
    May 2017
    April 2017
    March 2017
    February 2017
    January 2017
    December 2016
    November 2015
    October 2015
    September 2015
    August 2015
    July 2015
    June 2015
    May 2015
    April 2015

    வகைகள்

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.