தமிழ் ஷீஆ
Visit us on:
  • முகப்பு
  • ஆவணங்கள்
    • வீடியோ
    • ஆடியோ
    • புகைப்படங்கள்
    • நூல்கள்
  • செய்திகள்
  • கருத்துக்கள்
  • ஆக்கங்கள்
  • கேள்வி - பதில்

ஷீஆ மதத்தவர்களை இஸ்லாத்தை ஏற்க வைத்த சிக்கலான சில கேள்விகள். (தொடர் - 34)

12/12/2016

Comments

 
Picture
​​12.12.2016
http://www.tamilsheeya.com/
👂கேள்வி 37
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றபோது தம்மோடு அபூபக்ர் (ரழி) யை அழைத்துச் சென்றார்கள்.
காரணம் : அவர்கள் உயிரோடிருக்க வேண்டும். தமக்குப் பிறகு ஹிலாபத்தைப் பொறுப்பேற்க வேண்டும் என்ற உயர் நோக்கமே.
 
அதே நேரம் அலி (ரழி)யை காபிர்கள் வெட்டி அவர்கள் ஷஹீதாகும் வாய்ப்பு ஏதுவாக இருந்தும் தாம் படுத்திருந்த படுக்கையில் அலி (ரழி)யைத் தூங்க வைத்தார்கள்.
 
🌓கேள்வி: அலி (ரழி) நபிக்குப் பிறகு இமாமாகவும், அதற்கு வஸிய்யத் செய்யப் பட்டவராகவும், ஹிலாபத் பொறுப்புக்கு நபியால் நியமிக்கப் பட்டவராகவும் இருந்திருந்தால் எப்படி நபியவர்கள் தமது படுக்கையில் அலி (ரழி) யை விட்டுச் செல்வது?
இது எவ்விதத்தில் சாத்தியம்?
மறுபுறம் அபூபக்ர் (ரழி) மரணித்தால் இமாமத்துக்கு பிரச்சினை இருக்காது என்றிருந்தால் ஏன் நபியவர்கள் அலி (ரழி)யை விட்டு விட்டு அபூபக்ர் (ரழி)யை தம்மோடு அழைத்து சென்றார்கள்?
 
🌓 கேள்வி: இவ்விரு ஸஹாபாக்களில் எவர் சிறந்தவர்?
*ஒரு முள் கூட தைக்கக் கூடாது. அவர் உயிரோடிருக்க வேண்டும் என நபி விரும்பித் தேர்தெடுத்த அபூபக்ர் (ரழி) யா?
*அல்லது அபாயத்தின் விளிம்பில் நபி விட்டுச் சென்ற அலி (ரழி) யா?
 
நீங்கள் அலி (ரழி)க்கு "இல்முல் கைப்" (மறைவானவற்றின் அறிவுண்டு) என வாதிட்டால் இந் நிகழ்வில் அலி (ரழி) க்கு என்ன சிறப்புண்டு என்பதை நிரூபியுங்கள்.
 
📣 ஷீஆக்களிடமிருந்து தக்க பதில் எதிர்பார்க்கப் படுகிறது..................

இன் ஷா அல்லாஹ் தொடரும்...
Comments

    பதிவுகள்

    July 2017
    May 2017
    April 2017
    March 2017
    February 2017
    January 2017
    December 2016
    November 2015
    October 2015
    September 2015
    August 2015
    July 2015
    June 2015
    May 2015
    April 2015

    வகைகள்

    All

    RSS Feed

Powered by Create your own unique website with customizable templates.